Saturday, September 15, 2012

தமிழா !!


 
வள்ளுவன் தந்த வளர்தமிழ் இருக்கு
அண்ணல்  தந்த உண்மை இருக்கு!
கம்பன் தந்த கவிதை இருக்கு!
மழலை மொழியில் தெய்வம் இருக்கு!
தமிழா கவலை எதற்கு! - தாய்
தமிழே துணை உயிர்க்கு!

உழவன் தந்த கரும்பு இருக்கு!
கண்மணி போன்று நெல்மணி  இருக்கு!
கழனியில் விளைந்து நிறைந்து இருக்கு!
கனிகள் கனிந்து கமழ்ந்து இருக்கு!
தமிழா கவலை எதற்கு! - இங்கு
இல்லாமை இனி எதற்கு !

பாலும் பருப்பும் கலந்து இருக்கு!
பூந்தமிழ் மணக்கும் பொங்கல்  இருக்கு!
பருத்தி தந்த ஆடை இருக்கு!
தோப்பு நிறைய தென்னை இருக்கு!
தமிழா கவலை எதற்கு! - உழைப்பாய்
காலம் கனியும் உனக்கு